Homeஉள்நாடுகுளவிக் கொட்டு: ஆறு தொழிலாளர்கள் பாதிப்பு!

குளவிக் கொட்டு: ஆறு தொழிலாளர்கள் பாதிப்பு!

 

பொகவந்தலாவ இராணிகாடு மற்றும் சென்விஜயன்ஸ் ஆகிய தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் 24.10.2025. வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த நான்கு தொழிலாளர்களை தாக்கிய குளவி , இராணிகாடு தோட்ட பகுதியில் தெழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளர்களையும் தாக்கியுள்ளது.
இதில் 05 பெண் தொழிலாளர்களும் 01ஆண் தொழிலாளர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular