Homeஉள்நாடுபலமடைந்துவருகிறது மொட்டு கட்சி!

பலமடைந்துவருகிறது மொட்டு கட்சி!

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கிராம மட்டங்களிலும் பலமடைந்துவருகின்றது. மாகாணசபைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே தேர்தலில் போட்டியிடும் விதம் பற்றி முடிவெடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

” மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய வேட்பு மனு வழங்கும்போது, வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸ் சான்றிதழொன்று பெறப்படும். போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களா என்பது பற்றி ஆராயப்படும்.

குற்றவாளிகள் நாட்டைவிட்டு தப்பியோடுவதற்கு கடவுச்சீட்டு செய்து கொடுக்கும் தரப்புகள் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும். ” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular