Homeஉள்நாடுசஜித், ரணிலுடன் அரசியல் கூட்டு கிடையாது: மொட்டு கட்சி திட்டவட்டம்!

சஜித், ரணிலுடன் அரசியல் கூட்டு கிடையாது: மொட்டு கட்சி திட்டவட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுடன் அரசியல் ரீதியிலான கூட்டு பயணம் கிடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒருமித்தக்கொள்கையுடையக் கட்சிகளாகும். அந்த தரப்புகள் இணைவது பிரச்சினை இல்லை. அதனை வரவேற்கின்றோம்.
ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கை தனித்துவமானது.

ஒற்றையாட்சி, தேசிய பொருளாதாரம் என்பவற்றை மையப்படுத்தியது. எனவே, மேற்படி தரப்புகளுடன் அரசியல் ரீதியில் எமக்கு கூட்டு கிடையாது. ஆனால் ஜனநாயகம் மற்றும் ஏதேச்சாதிகாரத்துக்காக எதிரணியாக ஒன்றிணைந்து செயற்படக்கூடிய இடங்களில் ஒன்றிணைவோம். மாறாக அரசியல் ரீதியில் கூட்டு கிடையாது.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular