Homeஉள்நாடுநாய் குரைப்பதால் சிங்கம் அஞ்சாது: பொன்சேகாவுக்கு மஹிந்தவின் பேச்சாளர் பதிலடி!

நாய் குரைப்பதால் சிங்கம் அஞ்சாது: பொன்சேகாவுக்கு மஹிந்தவின் பேச்சாளர் பதிலடி!

 

” மஹிந்த ராஜபக்சதான் பொன்சேகாவை இராணுவத் தளபதி பதவிக்கு கொண்டுவந்தார். பொன்சேகாமீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அவரை உலகில் எந்த நாட்டுக்கு கொண்டுசென்றாவது பாதுகாக்குமாறு கூறிய தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. இப்படிபட்டவரையே அவர் இன்று கடுமையாக விமர்சித்துவருகின்றார்.”

இவ்வாறு மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

அத்துடன், இறுதிப்போரின்போது மஹிந்த ராஜபக்சவால் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது என்பது உட்பட பொன்சேகாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவர் முற்றாக நிராகரித்தார்.

அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள பொன்சேகா, இன்னமும் போர் மனோ நிலையிலேயே காணப்படுகின்றார் எனவும் மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

வெள்ளைக்கொடி கதையைக்கூறி படையினரை காட்டிக்கொடுத்த நபர்தான் பொன்சேகா. இது நாட்டு மக்களுக்கும் தெரியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular