Homeஉள்நாடுலிந்துலையில் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

லிந்துலையில் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

 

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தில் இருந்து நேற்று காணாமல்போன நபர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வலஹா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கா. கிருஷ்ணசாமி (70) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் காணாமல் போன இவரை உறவினர்கள் மற்றும் தோட்ட பொதுமக்கள் இணைந்து தேடியபோது, இன்று காலை தேயிலை தோட்டப் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப் பட்டுள்ளார்.

இது தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கெண்டு வருகின்றனர்.
கௌசல்யா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular