Homeஉள்நாடுநுவரெலியா மாநகர சபையிலும் என்.பி.பி. ஆட்சி!

நுவரெலியா மாநகர சபையிலும் என்.பி.பி. ஆட்சி!

நுவரெலியா மாநகரசபையில் என்.பி.பி. ஆட்சியமைத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் உபாலி வனிகசேகர, திறந்த வாக்கெடுப்பு மூலம் மாநகர சபையின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்,

அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் சிவன்ஜோதி யோகராஜா சபையின் பிரதி மேயராக தெரிவுசெய்யப்பட்டார்.

மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது.

இதில் தேசிய மக்கள் சக்தி சார்பாக உபாலி வனிகசேகர, சுயேட்சை குழு சார்பாக அஹகம ராமநாயகலாகே அஜித் குமார ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.

இதில் திறந்த வாக்கெடுப்பிற்கு 14 வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் 14 வாக்குகளை பெற்று சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட உபாலி வனிகசேகர தெரிவு செய்யப்பட்டார்.

எதிராக போட்டியிட்ட சுயேட்சை குழு உறுப்பினர் அஹகம ராமநாயகலாகே அஜித் குமார 11 வாக்குகளே பெற்றுக்கொண்டார்.

இதே இந்த மாநகர சபைக்கு பிரதி மேயர் தெரிவு செய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வீரமலை இளையராஜாவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக சிவன்ஜோதி யோகராஜாவும் போட்டியிட்டனர்.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட சிவன்ஜோதி யோகராஜா 14 வாக்குகளை பெற்று பிரதி மேயராக தெரிவானர். இவருக்கு எதிராக போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வீரமலை இளையராஜா அவர்கள் 11 வாக்குகளே வாக்குகளே பெற்றுக்கொண்டார்.

1. நுவரெலியா மாநகர சபை 25 உறுப்பினர்களை கொண்டது.

• தேசிய மக்கள் சக்தி – 12

• ஐக்கிய மக்கள் சக்தி – 04

• ஐக்கிய தேசியக் கட்சி – 03

• சுயேட்சை – 03

• இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 02

• ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 01

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular