HomeTop newsஅதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு அதிரடி விதி

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு அதிரடி விதி

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இன்று (19) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட விதிகளின்படியாகும்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டும் என்ற விதிகள் ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட போதிலும், சில வாகனங்களில் பின் இருக்கைகளில் பயணிப்பவர்களுக்கான ஆசனப்பட்டிகள் இல்லாத காரணத்தினால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதற்கமைய, பின் இருக்கைகளிலும் ஆசனப்பட்டிகளை பொறுத்திக் கொள்வதற்காக வழங்கப்பட்ட ஒரு வருட கால அவகாசம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று (18) நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular