மத்திய கிழக்கு போரின் போது தங்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உதவியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஈரான் தேசிய பாதுகாப்பு மன்ற துணைச் செயலாளர் கதிர் நெசாமிபூர், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் UAE தளங்களை பயன்படுத்தியதாக தெரிவித்தார்.
மேலும், ஈரானின் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களுக்கும் அமெரிக்கா UAE தளங்களை பயன்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியதுடன், பிராந்திய நாடுகள் அமைதி மற்றும் நல்லிணக்கக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
