Homeசெய்திவீதியில் நீர்பெருக்கெடுத்து ஓடுவதால் மாணவர்கள் அவதி!

வீதியில் நீர்பெருக்கெடுத்து ஓடுவதால் மாணவர்கள் அவதி!

மஸ்கெலியா நிருபர் – செ.தி.பெருமாள்

பொகவந்தலாவ நகரில் இருந்து சென்மேரிஸ் கல்லூரிக்குச் செல்லும் பிரதான வீதி, மழைக் காலங்களில் நீரோடையாக மாறுவதால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

முறையாகப் பராமரிக்கப்படாத வடிகால்கள் காரணமாகக் மழைநீர், கால்வாய்க்குள் செல்லாது, வீதியின் ஊடாகவே பெருக்கெடுத்து ஓடுகின்றது.

இதனுடன் கழிவுநீரும் கலப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் கல்விச் செயற்பாடுகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் கற்பித்தல் பணிகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளும், பாதசாரிகளும் இந்த நீர்ப்பெருக்கினால் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

இந்த விடயத்தில், நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் உடனடியாகத் தலையிட்டு, வடிகால் அமைப்பைச் சீரமைப்பதன் மூலமோ அல்லது தற்காலிகத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலமோ பொதுமக்களின் சிரமத்தைப் போக்க முன்வர வேண்டும் எனப் பிரதேச மக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular