Homeஉள்நாடுநுவரெலியாவில் வறட்சியான காலநிலை!

நுவரெலியாவில் வறட்சியான காலநிலை!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வறட்சியான காலநிலை நிலவி வருகிறது. இதனால் வெப்பநிலை அதிகரித்து நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் சடுதியாக குறைந்து வருவதாக மின்சாரதுறைச் சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வறட்சியான காலநிலையினை அடுத்து காசல்ரி, மாவுசாக்கலை, கெனியோன் விமலசுரேந்திர லக்சாபன நவலக்ஸபான உள்ளிட்ட நீர்த்தேக்;கங்களின் நீர் மட்டம் கனிசமான அளவு குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.காசல்ரி நீர்த்தேக்கத்தில் மாத்திரம் தற்போது 34 அடி நீர் தாழிறங்கியிருப்பதாகவும் ஏனைய நீர்த்தேக்கங்களில் கனிசமான அளவு நீர் தாழிறங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன. ஹட்டன் பகுதியில் குடிநீர் விநியோகம் சுமார் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடைவை மாத்திரம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றன.
இதனால் ஹட்டனில் உள்ள ஒரு சில உணவகங்கள் குடிநீரினை பணம் செலுத்தி பிரத்தியேகமாக பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு ஹட்டனை பிரதேசமான ரூவன்புர,அலத்கம கொட்டகலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.

இந்த குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு பிரதான காரணமாக வறட்சியான காலப்பகுதியில் காடுகளுக்கு தொடர்ச்சியான தீ வைக்கப்படுவதனால் பல நீரூற்றுக்கள் அற்றுப்போய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.

மலைவாஞ்ஞன்
நன்றி – தினகரன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular