ஈரான் வீராங்கனைகளுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை?

0
2

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் பங்கேற்ற ஈரானிய பெண் வீராங்கனைகள் மற்றும் உதவியாளர்கள் உட்பட எழுவருக்கு அடைக்கலம் வழங்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டு தேசிய கீதத்தைப் பாட மறுத்ததால் ஈரானில் இவர்களுக்கு உயிர்பயம் மற்றும் துரோகி என்ற முத்திரை குத்தப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அரசு மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவியைச் செய்துள்ளது.

சிட்னி விமான நிலையத்தில் வைத்து ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசப்பட்டு, எவ்வித அழுத்தமுமின்றி அவர்கள் தங்கள் விருப்பத்தின் பெயரில் தங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டது.

உள்துறை அமைச்சர் டோனி பர்க் இந்தச் செயல்முறையை நேரில் கண்காணித்து, அவர்களுக்குத் தேவையான விசா ஆவணங்களை உடனடியாக வழங்கினார்.

தற்போது தஞ்சம் புகுந்துள்ள இந்த ஏழு பேருக்கும் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஏனைய குழு உறுப்பினர்கள் தங்கள் குடும்பச் சூழலைக் கருத்தில்கொண்டு தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here