Homeஉலகம்12 ஆவது நாளாக தொடரும் போர்: ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று கூடுகிறது!

12 ஆவது நாளாக தொடரும் போர்: ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று கூடுகிறது!

மத்திய கிழக்கு போர்ச்சூழல் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று (11) முக்கிய இரு தீர்மானங்கள் தொடர்பில் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளன.

ஈரானின் தாக்குதல்கள் மற்றும் கடல்சார் வழித்தடங்களுக்கான அச்சுறுத்தல் என்பவற்றைக் கண்டித்து முதலாவது தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகள், பிரிட்டன் உட்பட மேலும் சில நாடுகள் இணைந்து இத்தீர்மானத்தை முன்வைத்துள்ளன.

மறுபுறத்தில் ஈரானின் நட்பு நாடான ரஷ்யாவும் தீர்மானமொன்றை முன்வைக்கவுள்ளது.

எந்தவொரு நாட்டையும் பெயரிடாமல் பொதுவான அமைதி மற்றும் பேச்சுக்கான அழைப்பு விடுக்கும் வகையில் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளின் தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், அது உண்மையை மறைப்பதாகவும் ஈரான் தூதர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேவேளை, மத்திய கிழக்கில் இடம்பெறும் வான்வழித் தாக்குதல்கள் ஐநா சாசனத்திற்கு எதிரானது என்று பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் ஏற்கனவே எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு போர் இன்று 12 ஆவது நாளாக தொடர்கின்றது. ஈரான்மீது உக்கிர தாக்குதல் நடத்தப்பட்டுவருகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular