Homeஉள்நாடுகிளங்கன் வைத்தியசாலை சம்பவம்: நீதி கோரி மஸ்கெலியாவில் போராட்டம்!

கிளங்கன் வைத்தியசாலை சம்பவம்: நீதி கோரி மஸ்கெலியாவில் போராட்டம்!

பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியொருவரின் சடலம் பாலியல் துஷ்பிரயோகத்தக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்தும், நீதி கோரியும் இன்றும் (05) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மஸ்கெலியா நகரில் திரண்ட இளைஞர், யுவதிகளே நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சமூக செயற்பாட்டாளர் ரொமேஷ் தர்மசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்துக்கு மஸ்கெலியா பகுதி இளைஞர், யுவதிகள் மற்றும் ஆட்டோ சாரதிகள் உள்ளிட்டோர் ஆதரவளித்து, பங்கேற்றனர்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பிண அறையிலேயே இக்கொடூரம் சம்பவம் ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

டிக்கோயா பகுதியை சேர்ந்த 23 வயது யுவதியொருவரின் சடலம் கடந்த 25 ஆம் திகதி பிரேத பரிசோதனைக்காக மேற்படி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதன்போது சிற்றூழியர்கள் மூவரே, அநாகரீகமான முறையில் செயல்பட்டுள்ளனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இச்செயலை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் ஹட்டன், நோர்வூட் உட்டப பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular