Homeஉலகம்தொடரும் தாக்குதல்: ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி!

தொடரும் தாக்குதல்: ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்பதற்ற நிலை உக்கிரமடைந்துவருகின்றது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் என்பன இணைந்து ஈரான்மீது ஆறாவது நாளாக இன்று தாக்குதல் நடத்திவருகின்றன.

ஈரானைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் ஏவுகணை உற்பத்தி மையங்கள், அணு சக்தி மையங்களை குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

மேற்படி தாக்குதலில் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்து லெபனான்மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது.

அதேவேளை, ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் தாக்குதலில் பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரசு எமிரேட் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன.

ஈரான் தாக்குதலில் 6 அமெரிக்க படையினர் பலியாகியுள்ளனர்.
இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular