Homeஉள்நாடுசடலத்துக்கு நடந்த கொடூரம்: நீதியான விசாரணை வேண்டும்!

சடலத்துக்கு நடந்த கொடூரம்: நீதியான விசாரணை வேண்டும்!

“மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தில் டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் இளம் பெண்ணின் சடலம் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பத்திற்கு நீதியான விசாரணை வேண்டும்.” – என்று அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியம் தலைவர் எஸ். சந்துரு பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

” டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலம் காமுகர்களின் பசிக்கு இரையாகியுள்ளதாக கூறப்படும் சம்பவம் மனிதநேயம் கொண்ட அனைவருக்கும் ஆழ்ந்த வேதனையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மரியாதைக்கும் சமூக நெறிகளுக்கும் முற்றிலும் முரணான இந்தக் கொடூரமான செயல் கடுமையாக கண்டிக்கப்படவேண்டியது.

இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு அவர்கள்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், அவர்கள் வகித்து வரும் பதவிகளில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதோடு, முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மனிதநேயத்தை மீறும் இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் சமூகத்திற்கே ஆபத்தானவர்கள்

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில் அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனவும் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியம் தலைவர் எஸ். சந்துரு பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular