Homeஉலகம்துருக்கி நாடாளுமன்றில் களேபரம்: எம்.பிக்களுக்கடையில் தள்ளு முள்ளு!

துருக்கி நாடாளுமன்றில் களேபரம்: எம்.பிக்களுக்கடையில் தள்ளு முள்ளு!

துருக்கியின் புதிய நீதி அமைச்சராக, அரச தலைமை சட்டத்தரணி அகின் குர்லெக்கை ஜனாதிபதி எர்டோகன் நியமித்தார். இதற்கு எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் அகின் குர்லெக் எம்.பியாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தபோது எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகின் குர்லெக்கின் பதவி பிரமாணத்தை தடுக்க முயற்சித்தனர்.
இதனால் ஆளும்கட்சி எம்.பி.க்களுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டு கைகலப்பானது.

ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மோதலில் ஈடுபட்டவர்களை பாதுகாவலர்கள் தடுத்தனர்.

மோதல் ஏற்பட்டபோதிலும் அகின் குர்லெக் எம்.பியாக பதவி ஏற்று கொண்டனர். அவரை சுற்றி ஆளும் கட்சி உறுப்பினர்கள் சூழ்ந்து கொண்டு ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்தனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular