Homeஉள்நாடுபழி தீர்க்குமா இலங்கை? நாளை 2ஆவது டி20 போட்டி!

பழி தீர்க்குமா இலங்கை? நாளை 2ஆவது டி20 போட்டி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.

கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் இலங்கை நேரப்படி போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.

இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கான முதல் டி20 போட்டி நேற்று பல்லேகலயில் நடைபெற்றது.

மழை காரணமாக போட்டி 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.

134 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இந்திலாந்து அணி 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளை மழை மீண்டும் குறுக்கிட்டது.

இதனால் டக்வொர்த் லூயிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, இங்கிலாந்து அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular