Homeஉள்நாடுபுலம்பெயர்ந்தாலும் தமிழர் அடையாளம் மாறாது – அயலகத் தமிழர் தினம் 2026!

புலம்பெயர்ந்தாலும் தமிழர் அடையாளம் மாறாது – அயலகத் தமிழர் தினம் 2026!

புலம்பெயர்ந்தாலும் தமிழர் அடையாளம் மாறாது – அயலகத் தமிழர் தினம் 2026!

“தூய தமிழின் பெருமை காத்து,
உலகம் எங்கும் பரப்பாகி வளர்க!
மாதா மொழி, பழமைச் சங்கீதம்,
ஒன்றுபட்டு கொண்டாடுவோம் நம் உறவை.”

“நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் எங்கள் பிள்ளைகள்தான்” – உலகத் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் அழைப்பு.

உலகம் முழுவதும் வாழும் அயலகத் தமிழர்களை ஒரே குடும்பமாக இணைக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் தினம் – 2026 விழாவை ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சிறப்பாக நடத்த உள்ளது.

இந்த விழாவின் முக்கிய நோக்கம்:

புலம்பெயர்ந்தாலும் தமிழர் அடையாளம் அழியக் கூடாது என்ற உறுதி வெளிப்படுத்துதல்.

தலைமுறை தலைமுறையாக தமிழின் மொழி, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் தமிழ்நாட்டுடனான உறவை வலுப்படுத்துதல்.

இரு நாள் விழாவில்:

பாரம்பரிய கலைகள், இசை, நடனம், கலாச்சாரம்
பாரம்பரிய உணவுகள் மற்றும் உடைகள்
உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களின் அனுபவங்கள் மற்றும் பெருமை இதனைப்போன்று உலகத் தமிழர்களை ஒரே மேடையில் இணைக்கும் ஒரு நிகழ்வாக அயலகத் தமிழர் தினம் – 2026 அமைய உள்ளது.

உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், தமிழகம் தங்கள் தாய் மண்; தமிழ்நாடு அரசு தங்கள் சொந்த அரசு என்ற உணர்வை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு அனைவருக்கும் அன்புடன் அழைப்பு விடுக்கிறது.

தமிழால் இணைவோம் தமிழால் உயர்வோம்!

வாய்மையின் ஒளியில் வெற்றி!
தமிழ்மொழி நம் உயிர்!
தமிழ்நாடு நம் பெருமை!
உயர்ந்து வாழ்வோம் தமிழராய்!

தமிழின் பெருமையை உணர்ந்து பகிர்பவள் – நான் விஜயகுமாரன் தர்ஷிகா ✍️ இந்தியா மற்றும் இலங்கை இரு நாடுக்களுக்குமான தமிழ் கலாச்சார பண்பாடு தூதுவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular