Homeஉலகம்அமெரிக்கா தலையிடும்: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்கா தலையிடும்: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அமைதியான போராட்டங்களை ஈரான் அரசு அடக்கினால் அமெரிக்கா தலையிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானில் பணவீக்கத்தை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையிலான மோதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர் .

இது தொடர்பாக டொனால்ட் டிரம்ப்வெளியிட்டுள்ள பதிவில்,

” போராட்டக்காரர்களை ஈரான் சுட்டுக் கொன்றால், அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும். வன்முறையில் அமைதியான போராட்டங்களை அடக்கினால் அமெரிக்கா தலையிடும்.” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் அலி லாரி ஜானி கூறியதாவது: ஈரான் எதிர்ப்புப் பிரச்னையில் அமெரிக்காவின் தலையீடு முழு பிராந்தியத்திலும் குழப்பத்திற்குச் சமம் என்பதை டிரம்ப் அறிந்து கொள்ள வேண்டும், என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular