Homeஉள்நாடுசுற்றுலாத்துறையில் சாதனை படைத்த இலங்கை!

சுற்றுலாத்துறையில் சாதனை படைத்த இலங்கை!

2025 ஜனவரி முதல் டிசம்பர் 29 ஆம் திகதிவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 23 லட்சத்து 33 ஆயிரத்து 797 ஆகும்.

சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயணிகளுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டில் 23 லட்சத்து 33 ஆயிரத்து 796 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்திருந்தனர். அதன்பின்னர் 7 ஆண்டுகளுக்கு பிறகு இம்முறையே வருடமொன்றில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular