Homeஉள்நாடு1000 பில்லியன் ரூபா நிதி கோரும் குறை நிரப்பு பிரேரணை 18 ஆம் திகதி முன்வைப்பு!

1000 பில்லியன் ரூபா நிதி கோரும் குறை நிரப்பு பிரேரணை 18 ஆம் திகதி முன்வைப்பு!

ஆயிரம் பில்லியன் ரூபா நிதி கோரும் குறைநிரப்பு பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி கூடும் விசேட நாடாளுமன்ற அமர்வின்போது இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, 500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

எனினும், நலன்புரி கொடுப்பனவுகள் மற்றும் அவசர பழுதுபார்ப்பு பணி செலவுகள் குறித்த புதிய மதிப்பீடுகள் கணக்கிடப்பட்ட பின்னர், இந்தத் தொகை இரட்டிப்பாகியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறைநிரப்பு பிரேரணை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, 19 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படும். எதிரணியும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.
அதன் பின்னர் சபை ஜனவரி 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular