Homeஉள்நாடுசர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு யோசனை!

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு யோசனை!

இலங்கையை மீட்பதற்கு சர்வதேச உதவி அவசியம். எனவே, சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை உடன் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளருமான் எஸ்.எம். மரிக்கார் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ இலங்கையானது நாட்டு மக்களுக்கு சொந்தமானது. மாறாக ஆட்சியாளர்களுக்கு அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆட்சியாளர்களுக்கு நாட்டை ஆள்வதற்குரிய தற்காலிக அதிகாரமே வழங்கப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு போதுமானளவு அனுபவம் இல்லை. எனவே, அனுபவம் உள்ளவர்கள் கூறும் ஆலொசனைகளை ஏற்பதற்கு தயாராக வேண்டும்.
இலங்கையை மீட்பவதற்கு சர்வதேச உதவி அவசியம்.

எனவே, சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்துமாறு கோருகின்றோம். இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு எதிரணிகளும் ஒத்துழைப்பு வழங்கும்.”- என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular