Homeஉள்நாடுலெவலன் தோட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் வெளிக்கள உத்தியோகத்தர் கைது!

லெவலன் தோட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் வெளிக்கள உத்தியோகத்தர் கைது!

புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெவலன் தோட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புப்புரஸ்ஸ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, அவர் தங்கி இருந்த தோட்ட விடுதியில் நேற்று மதியம் பொலிஸார் சோதனை நடத்தினர்.

இதன்போதே பையொன்றில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

க,யோகா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular