Homeஉள்நாடுமீண்டும் 3 சதவீதத்துக்கு இறங்கிவிடுவோமென என்.பி.பி. அஞ்சுகிறது!

மீண்டும் 3 சதவீதத்துக்கு இறங்கிவிடுவோமென என்.பி.பி. அஞ்சுகிறது!

முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று தெரிவித்தார்.

” உள்ளுராட்சிசபைத் தேர்தலில் அரசாங்கத்தின் வாக்கு வங்கி 23 லட்சத்தால் குறைவடைந்தது.
மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் இந்நிலைமை மேலும் மோசமாகும். மீண்டும் 3 சதவீதத்துக்கு இறங்கிவிடுவோம் என அரசாங்கம் அஞ்சுகின்றது. முடிந்தால் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்.” எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்து செயற்படுவதற்கு ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி பொதுச்செயலாளர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular