Homeஉள்நாடுசர்வதேச நீதி கோரும் உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாள் இன்று!

சர்வதேச நீதி கோரும் உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாள் இன்று!

 

தமிழ் மக்களுக்குச் சர்வதேச நீதி கோரிய உண்ணாவிரதப் போராட்டத்தின்இறுதி நாளான இன்று புதன்கிழமைசகல தரப்பினரும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று வடக்கு -கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.

உள்நாட்டுப் பொறிமுறையைநிராகரிக்கின்றோம், தமிழின அழிப்பு, காணாமல் ஆக்கப்படுதல், போர்க் குற்றங்கள், மனிதப் புதைகுழிகள் தொடர்பான விடயங்களுக்குச் சர்வதேச -சுயாதீன விசாரணையே வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துசுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 2 5ஆம் திகதி ஆரம் பமானது.

யாழ். செம்மணியில் அணையாவிளக்கு போராட்டம் நடைபெற்ற இடத்தில்தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சுழற்சிமுறையிலான இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று புதன்கிழமை நிறை வடைகின்றது.

போராட்டத்தின் 6ஆவது நாளானநேற்று போராட்ட ஏற்பாட்டாளர்கள் ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியி டுகையில்,

‘‘போராட்டத்தின் இறுதி நாளான இன்று புதன்கிழமை அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று எமது கோரிக்கைகளுக்குவலுச் சேர்க்க வேண்டும். போராட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மனு வாசிக்கப்பட்டு,ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படும்.” – என்று கூறினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular