Homeஉள்நாடுமக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்!

மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்!

“ ஆட்சியை முன்னெடுக்க எமக்கு முடியாவிட்டால் மக்கள் கழுத்தை பிடித்து வெளியே தள்ளும்வரை காத்திருக்கமாட்டோம். தாமாகவே விலகி சென்றுவிடுவோம்.    ஆனால் அவ்வாறானதொரு நிலை ஏற்படாது. ஏனெனில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றோம்.”

இவ்வாறு அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ சில    வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நியாயமான காலம் அவசியம். அக்காலப்பகுதிக்குள்  பொருளாதாரம், அரசியல்,  சமூகம், கல்வி,  ஊழல் ஒழிப்பு என்பன தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை செயற்படுத்த தவறினால்   மக்கள் எம்மை நீக்கலாம். அதற்குரிய தார்மீக உரிமை மக்களுக்கு உள்ளது.

ஆனால்     எமக்கு    முடியாவிட்டால்    மக்கள் விரட்டும் வரை காத்திருக்கமாட்டோம். தாமாகவே    சென்றுவிடுவோம். புதவிகளை இறுகப்பிடித்துக்கொண்டிருக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு கிடையாது. பதவி ஆசையில் அதிகாரத்தைப் பிடித்தவர்கள் நாம் அல்லர். பல தியாகங்கள், வலிகளுக்கு மத்தியிலேயே ஆட்சிக்கு வந்துள்ளோம். எனவே, மக்கள் கல்லடித்து விரட்டும்வரை காத்திருக்கமாட்டோம்.

எமக்கு முடியாது என்பது மக்களுக்கு முன்னர் எமக்கு உணரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படியான நிலையை நாம் உணரவில்லை.    அப்படியான நிலை வராது. மக்களுக்காக திருப்தியுடன் செயற்படுகின்றோம். திட்டங்களைஉ ருவர்ககி வவருகின்றோம்.     எமது உறுப்பினர்கள் கற்றுக்கொண்டே வேலை செய்கின்றனர். புதியவர்களாக இருந்தாலும் அனுபவங்களைப் பெற்று சேவையாற்றுவதில் தீவிரம் காட்டிவருகின்றனர்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular