HomeTop newsமறைந்த புகழ்பெற்ற கலைஞர் பிரியங்கர பெரேராவிற்கு நாளை இறுதி அஞ்சலி

மறைந்த புகழ்பெற்ற கலைஞர் பிரியங்கர பெரேராவிற்கு நாளை இறுதி அஞ்சலி

காலமான பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேராவின் இறுதிச்சடங்குகள் நாளை (03) நடைபெறும் என அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது பூதஉடல் இன்று (02) பிற்பகல் பொரளை பகுதியில் உள்ள தனியார் மலர்சாலைய ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

நீண்டகாலமாக நோயுற்றிருந்த பிரியங்கர பெரேரா, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) இரவு காலமானார்.

பிரபல பாடகர் ஜே.ஏ. மில்ட்டன் பெரேராவின் மகனான பிரியங்கர பெரேரா, பல பிரபல பாடல்களைப் பாடியுள்ளதுடன் நடிகராகவும் பங்களிப்புச் செய்துள்ளார்.

பிரியங்கர பெரேரா திரைப்படங்கள் மட்டுமன்றி பல நாடகங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular