HomeTop newsபிரதி மேயர், உப தவிசாளர்களாக தெரிவாகும் அரச அதிகாரிகளுக்கு புதிய விடுமுறை நடைமுறை

பிரதி மேயர், உப தவிசாளர்களாக தெரிவாகும் அரச அதிகாரிகளுக்கு புதிய விடுமுறை நடைமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு பிரதி மேயர் அல்லது உப தவிசாளராகத் தெரிவு செய்யப்படும், அரசியல் உரிமைகளைக் கொண்ட அரச அதிகாரிகளுக்கு சம்பளத்துடனான 6 நாட்கள் விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது சம்பளமற்ற விடுமுறையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நிறுவன ஆணைக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தின் 2:3:4 உப பிரிவைத் திருத்தி வெளியிடப்பட்ட 2021 ஜூன் 25ஆம் திகதியிட்ட 12/2021 இலக்க அரச நிர்வாகச் சுற்றறிக்கையை மேலும் திருத்தி புதிய விதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2026 ஜூன் 22ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நிறுவன ஆணைக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தில் 2:3:4:1 என்ற புதிய உப பிரிவொன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த புதிய விதியின்படி, உள்ளூராட்சி மன்றமொன்றின் பிரதி மேயர் அல்லது உப தவிசாளராகத் தெரிவு செய்யப்படும் அதிகாரி ஒருவருக்கு, முன்னர் இருந்தவாறு சம்பளத்துடனான 6 நாட்கள் விடுமுறையைப் பெற்றுக்கொள்ள அல்லது தனது விருப்பத்திற்கமைய அந்தப் பதவிக் காலத்திற்குள் சம்பளமற்ற விடுமுறையொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்தத் திருத்தமானது அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular