HomeTop newsடிரம்ப் கருத்தால் அமெரிக்கா - இத்தாலி இடையே தூதரக பரபரப்பு

டிரம்ப் கருத்தால் அமெரிக்கா – இத்தாலி இடையே தூதரக பரபரப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இடையே கருத்து முரண்பாடு உருவாகியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் போது, தன்னுடன் புகைப்படம் எடுப்பதற்காக இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி வேண்டுகோள் விடுத்ததாகவும், அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கலாம் என்றும் டொனால்ட் டிரம்ப், இத்தாலிய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ஆனால், டிரம்பின் இந்தக் கருத்தை ஜியோர்ஜியா மெலோனி கடுமையாக மறுத்துள்ளார். தனது எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “டிரம்பின் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. நானோ, இத்தாலியோ எந்தச் சூழ்நிலையிலும் யாரிடமும் கெஞ்சியதில்லை” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இத்தாலி குறித்து அமெரிக்க ஜனாதிபதி அவதூறான கருத்துகளை வெளியிடுவது இது முதல் முறை அல்ல என்றும், நட்பு நாடுகள் தொடர்பில் இவ்வாறான அணுகுமுறை வருத்தமளிப்பதாகவும் மெலோனி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தாஜானி, அமெரிக்காவிற்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த தனது அதிகாரப்பூர்வ பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம், அமெரிக்கா–இத்தாலி உறவுகளில் புதிய அரசியல் மற்றும் தூதரக சவால்களை உருவாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular