HomeTop news"இது எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் நடக்கலாம்" - சுரேஷ் சலே விவகாரத்தில் ஐதேக எச்சரிக்கை

“இது எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் நடக்கலாம்” – சுரேஷ் சலே விவகாரத்தில் ஐதேக எச்சரிக்கை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு எதிராக, அரசியலமைப்பு மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு முரணான வகையில் நடத்தப்படும் விதம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அக்கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சுரேஷ் சலே நடத்தப்படும் விதம் குறித்து நேரில் ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை அனுப்புவது பொருத்தமானதாகும்.

இந்த விவகாரத்தில் உள்ள ஆபத்தான பின்னணியைத் தமது கட்சி அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, சுரேஷ் சலே நடத்தப்படும் இத்தகைய விதம் சாதாரணமான ஒன்றாக மாற்றப்பட்டால், எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக் குழுக்களுக்கும் இதே நிலைமை அமுல்படுத்தப்படலாம் என்றும், அது மிகவும் ஆபத்தானதொரு போக்காகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க அமைந்திருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் அரசாங்கம் செயற்படும் விதம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் தீவிரமாக அவதானித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular