HomeTop newsபின்னதுவ அதிவேக நுழைவாயிலருகே பேருந்து விபத்து - 10 பேர் காயம்

பின்னதுவ அதிவேக நுழைவாயிலருகே பேருந்து விபத்து – 10 பேர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று (08) மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று, பின்னதுவ நுழைவாயிலின் பாதுகாப்புப் பக்க வாயிலையும் உடைத்துக் கொண்டு சென்று அருகில் இருந்த தூண் ஒன்றில் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களை பொலிஸார் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்கள் இணைந்து காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பின்னதுவ அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular