இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்துள்ளது.
அதன்படி, கடந்த காலத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,010,807 என சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மே மாத தொடக்கத்தில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 134,530 என்றும் அந்த ஆணையம் கூறியுள்ளது.
