Homeஉள்நாடுதிறைசேரியில் 2.5 மில்லியன் டொலர் திருட்டு-CID விசாரணை!

திறைசேரியில் 2.5 மில்லியன் டொலர் திருட்டு-CID விசாரணை!

திறைசேரியில் 2.5 மில்லியன் டொலர் திருட்டு-CID விசாரணை!

வெளிநாட்டுக் கடன் சேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பந்தப்பட்ட மோசடி குறித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

திறைசேரி அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் உள்ள ஒரு வங்கிக் கணக்கு மூலம் இந்த நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விசாரணையில் அவுஸ்ரேலிய அதிகாரிகளின் உதவியை நாடுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.

திருடப்பட்ட இந்தத் தொகை, மொத்தம் 22.9 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒரு வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதலுடன் தொடர்புடையது என்றும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பதைக் கண்டறியவும், இதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணவும் நிதி அமைச்சு ஒரு சிறப்பு உள்ளக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular