Homeஉள்நாடுஏப்ரலில் 9 எரிபொருள் கப்பல்கள் வரும்: கட்டுப்பாடுகள் விரைவில் நீங்கும்

ஏப்ரலில் 9 எரிபொருள் கப்பல்கள் வரும்: கட்டுப்பாடுகள் விரைவில் நீங்கும்

இலங்கைக்கு இம்மாதம் 9 எரிபொருள் கப்பல்கள் வரவுள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“மத்திய கிழக்கு போர் வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் வெற்றிகரமாக கையாண்டுவருகின்றது.

குறிப்பாக பற்றாக்குறையின் உச்சக்கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் விரைவில் படிப்படியாக நீக்கப்படலாம்.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எரிபொருள் தேவையைக் குறைப்பதற்காக பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த புதன்கிழமை, விரைவில் ஒரு வழக்கமான வேலை நாளாக மாறக்கூடிய சூழ்நிலை உள்ளது.

விநியோக நிலைமைகள் மேலும் முன்னேற்றமடைந்தவுடன், QR குறியீட்டு முறை மற்றும் ஒற்றை-இரட்டை எரிபொருள் விநியோக முறை ஆகியவை நீக்கப்படும் என்றும் அமைச்சர் விஜித மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular