Homeஉள்நாடுநானுஓயா கிளாஸ்ஷோ தோட்டக் குடியிருப்பில் தீ விபத்து

நானுஓயா கிளாஸ்ஷோ தோட்டக் குடியிருப்பில் தீ விபத்து

நானுஓயா கிளாஸ்ஷோ தோட்டத்தின் மத்திய பிரிவில் இன்று பிற்பகல் சுமார் 1.00 மணியளவில் ஒரு குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் அந்த வீடு முழுமையாக எரிந்து சாம்பலானது.

தீ விபத்தினால் வீட்டில் இருந்த அனைத்து உடமைகளும் முற்றிலும் அழிந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடியிருப்பில் வசித்த ஐந்து பேர் தற்போது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இத்தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருவதாக நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா நிருபர்
செ.தி. பெருமாள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular