Homeஉலகம்ஈரான் வீராங்கனைகளுக்கு தஞ்சம் வழங்கியது ஆஸ்திரேலியா!

ஈரான் வீராங்கனைகளுக்கு தஞ்சம் வழங்கியது ஆஸ்திரேலியா!

ஈரானின் மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனைகளுக்கு ஆஸ்திரேலியா புகலிடம் வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சரை, வீராங்கணைகள் நேற்றிரவு சந்தித்துள்ளனர்.

இதன்போது உரிய ஆவணங்களில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஈரானின் மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனைகளுக்கு அடைக்கலம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியா அடைக்காலம் வழங்காதபட்சத்தில் தமது நாடு அவர்களை பொறுப்பேற்கும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த ஐந்து வீராங்கனைகள், ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி இருந்தனர்.
2026 மகளிர் ஆசியக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றுவருகின்றது.

ஆஸ்திரேலியா கோல்ட் கோஸ்டில் பிலிப்பைன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற குழு ஆட்டத்தில் ஈரான் அணி தோல்வி அடைந்தது. இதனால் உலகக்கிண்ண தொடரில் இருந்து அவ்வணி வெளியேறியது.
ஐந்து வீராங்கணைகள் போட்டியில் தேசிய கீதத்தைப் பாட மறுத்ததால், அவர்கள் தாயகத்தில் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஈரான் அரச ஊடகம் அவர்களை துரோகிகள் என விமர்சித்துள்ளது எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் தங்களின் பாதுகாப்பிற்காகத் தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியேறிய இந்த வீராங்கனைகள், குயின்ஸ்லாந்து காவல்துறையின் பாதுகாப்பில் இருந்தனர்.

இந்நிலையிலேயே அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular