Homeஉலகம்ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு எவர் வந்தாலும் கொல்வோம்: இஸ்ரேல் சபதம்!

ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு எவர் வந்தாலும் கொல்வோம்: இஸ்ரேல் சபதம்!

“ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை படுகொலை செய்வது உறுதி” என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட நிலையில், அந்நாடு புதிய உச்ச தலைவரை தேர்வு செய்யவுள்ள சூழலில், இத்தகைய எச்சரிக்கையை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஹீப்ரூ மொழியில் பகிர்ந்த பதிவில், “ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை படுகொலை செய்வது உறுதி. அவரது பெயர் என்னவாக இருந்தாலும், அவர் எங்கு பதுங்கியிருந்தாலும் அவரைத் தேடி அழிப்போம்.

இதற்காக, நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து முழு பலத்துடன் செயல்படுவோம். தற்போதைய ஈரான் ஆட்சி தன்னை மீள்கட்டமைப்பதற்கான வாய்ப்புகளை நசுக்குவோம். ஈரானிய மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எரிந்துவிட்டு புதிய ஆட்சியை அமைக்கும் சூழலை உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இஸ்ரேலிய பிரதமருக்கும், இஸ்ரேலியப் படைகளுக்கும், எப்போதும் தயார் நிலையில் இருக்கும்படியும், போரில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளேன்” என்று காட்ஸ் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular