Homeஉள்நாடுநாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மத்திய கிழக்கு நிலைவரம் குறித்து ஆராய்வு!

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மத்திய கிழக்கு நிலைவரம் குறித்து ஆராய்வு!

நாடாளுமன்றம் இன்று (03) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் மற்றும் அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் என்பன தொடர்பில் எதிரணிகள் கேள்விகளை எழுப்ப உள்ளன.

இதனால் இன்றைய சபை அமர்வின்போது மத்திய, கிழக்கு விவகாரம் தொடர்பிலேயே அதிகளவு பேசப்படலாம் என தெரியவருகின்றது.

குறிப்பாக மத்திய கிழக்கு நிலைவரம் தொடர்பில் இந்தவார நாடாளுமன்ற அமர்விலேயே விசேட விவாதமொன்றை எதிரணி கோரலாம் என தெரியவருகின்றது.

அத்துடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார் என தெரியவருகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular