Homeஉள்நாடுமத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்கள் குறித்து ஆராய நாளை விசேட கூட்டம்: சஜித் அழைப்பு!

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்கள் குறித்து ஆராய நாளை விசேட கூட்டம்: சஜித் அழைப்பு!

மத்திய கிழக்கில் மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்களின் நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கூட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமே சஜித் பிரேமதாசவால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை (03) இந்த அவசர கூட்டம் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக, பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்களின் நலன்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

மேற்படி மோதல்கள் காரணமாக எதிர்காலத்தில் நமது நாட்டைபஇலங்கையை பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.

இதன்போது எட்டப்படும் முடிவுகளின் அடிப்படையில் சில யோசனைகள் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular