Homeஉள்நாடுபடைகள் இருப்பதாலேயே வடகிழக்கு மக்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனராம்: மொட்டு கட்சி விளக்கம்!

படைகள் இருப்பதாலேயே வடகிழக்கு மக்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனராம்: மொட்டு கட்சி விளக்கம்!

” வடக்கு, கிழக்கில் படை முகாம்கள் இருப்பதாலேயே தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

“சுதந்திரம் என்பது அபிமானம். அதன் கம்பீரத்தன்மையைக் குறை மதிப்புக்கு உட்படுத்தக்கூடாது. உலகில் எந்தவொரு நாடும் அவ்வாறு செய்யாது.

ஆனால் இலங்கையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் சுதந்திரத்தினத்தின் கம்பீரத்தன்மை இல்லாமல் போயுள்ளது. செலவுகளை கட்டுப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் அபிமானம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

படையினரின் வீரதீர செயல்கள் பற்றி பேசப்படவில்லை. நாட்டில் இன்று அவசரகால சட்டம் அமுலில் உள்ளது. இந்நிலையில் வடக்கு, கிழக்கில் கறுப்பு கொடி ஏற்றப்படுகின்றது. இதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

இராணுவ முகாம்கள் , பொலிஸ் (வடக்கு, கிழக்கில்) இருப்பதால்தான் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சியவற்றையும் அகற்றினால் பொலிஸையும் அகற்றுமாறு கோருவார்கள்.” – எனவும் சாந்த பண்டார குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular