HomeBig Storyஅனர்த்தங்களில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண விபரம்...!

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண விபரம்…!

🛑அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்கு 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு…!

🛑மீள்குடியேற்றத்துக்குரிய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு 50 ஆயிரம் ரூபா. ( வீட்டு உரித்து கருத்தில் கொள்ளப்படமாட்டாது)

🛑முற்றாக சேதமடைந்துள்ள – மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு 50 லட்சம் ரூபா ……..!
(வெள்ளம், மண்சரிவு இரண்டுக்கும் பொருந்தும்)

🛑அபாய வலயங்களுக்கு மீண்டும் செல்வதற்கு இடமளிக்கமாட்டோம். அரச காணி வழங்கப்படும். அரச காணி இல்லாவிட்டால் காணி வாங்குவதற்கு 50 லட்சம் ரூபாவரை கொடுப்பனவு வழங்கப்படும்.

🛑பகுதியளவு சேதமடைந்துள்ள வீடுகளை புனரமைப்பதற்கு அதிகபட்சமாக 25 லட்சம்ரூபாவரை வழங்கப்படும். (நான்கு கட்டங்களாக இதற்குரிய மதிப்பீடு இடம்பெறும்.)

🛑அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு
ஜனாதிபதி அநுர நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையில் இருந்து மேற்படி தொகுப்பு…

மேற்படி திட்டங்களுக்காக இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்படும்.
இதனை நிறைவேற்றிக்கொள்வதற்காக நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடும்.
கொடுப்பனவு தொடர்பான நடைமுறைகள் அடங்கிய சுற்றரிக்கையும் வெளியிடப்படவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular