Homeஉள்நாடுமருத்துவ செலவுக்கு பணம் இல்லை: பதுளை வீட்டை விற்றார் டிலான் பெரேரா

மருத்துவ செலவுக்கு பணம் இல்லை: பதுளை வீட்டை விற்றார் டிலான் பெரேரா

 

” நான் நோய் வாய் பட்டிருந்தேன். எனக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதைவிடவும் அதிக செலவு ஏற்பட்டது. அதனை ஈடுசெய்வதற்கு என்னிடம் பணம் இருக்கவில்லை. எனவே, பதுளையில் நான் 63 வருடங்களாக வாழ்ந்த வீட்டை விற்பனை செய்துவிட்டேன். எனது தந்தை வழி உரிமையாகவே எனக்கு இந்த வீடு கிடைத்தது.

வீட்டை விற்ற பணத்தில் மருத்து செலவை செலுத்திவிட்டேன். எஞ்சிய பணத்தில் சிறிய வீடொன்றை கட்டிக்கொண்டு எஞ்சிய காலத்தை கடந்த வேண்டியதுதான். இங்கிருந்தே அரசியலிலும் ஈடுபடுவேன். ஜனாதிபதி நிதியத்திடம் பணம் கேட்பதற்கு நான் முற்படவில்லை. ”

இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பதுளையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular