Homeஉள்நாடுகோல் கம்பம் சரிந்து வீழ்ந்து இளைஞன் பலி: யாழில் சோகம்!

கோல் கம்பம் சரிந்து வீழ்ந்து இளைஞன் பலி: யாழில் சோகம்!

யாழ்ப்பாணத்தில் காற்பந்து விளையாடிக்கொண்டிருந்த போது, இளைஞன் மீது கோல் கம்பம் சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நாவாந்துறை பகுதியை சேர்ந்த 29 வயதான யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று (20) சக வீரர்களுடன் காற்பந்து விளையாடிக்கொண்டிருந்தவேளை , கோல் காப்பாளரான இளைஞன் மீது கம்பம் சரிந்து விழுந்துள்ளது.

அதில் படுகாயமடைந்த இளைஞனை மைதானத்தில் நின்றவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular