Homeஉள்நாடுஎமக்கு வாக்கு அல்ல மக்களின் வாழ்க்கையே முக்கியம்!

எமக்கு வாக்கு அல்ல மக்களின் வாழ்க்கையே முக்கியம்!

கடந்த அரசாங்கங்கள் எமது வாக்குகளை குறிவைத்துதான் செயற்பட்டது. மக்களின் வாழ்க்கை பார்க்கவில்லை என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்க பிரதீப் தெரிவித்தார்.

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துக்கு அமைவாக ‘ அழகான வீடு – வளமான குடும்பம்” தொடர் வீடுகளை புனரமைக்கும் செயற்றிட்டம் ஜூலை (06) ஆம் திகதி கஹவத்தை, ஓபாத்த இலக்கம் 01 மேல் பிரிவில் முன்னெடுக்கப்பட்டது.

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன , பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் அரச அதிகாரிகளால் இச்செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது உரையாற்றிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கூறியவை வருமாறு,
‘அழகிய தீவையும் மகிழ்ச்சியான மக்களையும் உருவாக்கும் தூய்மையான இலங்கை தேசிய திட்டத்திற்கு இணங்க இந்த நாட்டில் தேயிலை உள்ளிட்ட பெருந்தோட்டத் தொழில் துறைக்காக கடுமையாக உழைக்கும் மலையக மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதும் பெருந்தோட்டத் துறையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, இந்தத் திட்டம் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், தொடர் குடியிருப்புகள் சுத்தம் செய்யப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு, சுவர்கள் மற்றும் தரைகள் புனர்நிர்மாணம் செய்யப்படுவதோடு சேதமடைந்த கூரைத் தகடுகள் அகற்றப்பட்டு, புதிய கூரைத் தகடுகள் அல்லது கூரை முழுமையாக சரிசெய்யப்படும்.
அத்துடன் சிரமதானம் மூலம் சுற்றியுள்ள பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு வடிகால் அமைப்புகள் மேம்படுத்தப்படும், அஞ்சல் துறையின் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்துவமான முகவரிகள் வழங்கப்படும், அஞ்சல் விநியோக அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் கடிதங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வார்கள், பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கு பிரதேச செயலகங்கள் மற்றும் பதிவாளர்களின் ஒத்துழைப்புடன் தேவையான வசதிகள் வழங்கப்படும், மேலும் மலையக சமூகத்தின் மனப்பான்மையை விருத்தி செய்து மற்றும் கல்விநிலையை உயர்த்துவதன் மூலம் மனப்பான்மை ரீதியிலான மாற்றத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு செயல் திட்டங்கள் பல்வேறு வழிகளினூடாக செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மே மாதம் ஒபாவத்தயில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, மாத்தறை, களுத்துறை, காலி, கேகாலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் தோட்டத் துறையுடன் தொடர்புடைய 75 வரிசை வீடுகளையும் 1072 குடும்பங்களையும் தேர்ந்தெடுத்துள்ளது, மேலும் எதிர்காலத்தில் அந்த மாவட்டங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டத்தில், பிராந்திய தோட்ட நிறுவனங்களால் 75 வரிசை வீடுகள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் இந்த திட்டத்தால் பயனடையும் குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 3000 ஆகும். தோட்டத் தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக, ஏற்றுமதியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் மற்றும் தோட்டத் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இலங்கை தேயிலை வாரியத்துடன் ஒருங்கிணைந்து ரூ. 112 மில்லியன் நிதி நன்கொடையை வழங்கியுள்ளன.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular