Homeஉள்நாடுநானுஓயாவிலுள்ள ஆபத்தான மரத்தை அகற்றுமாறு வலியுறுத்து!

நானுஓயாவிலுள்ள ஆபத்தான மரத்தை அகற்றுமாறு வலியுறுத்து!

 

நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதி ஆரம்பமாகும் நாவலர் கல்லூரிக்கு அருகாமையில் வீதியோரத்தில் உள்ள இந்த ஆபத்தான மரத்தை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் , பாடசாலை மாணவர்கள் அதிகம் நடந்து செல்லும் இடமாக உள்ளதாலும், வாகன போக்குவரத்துக்கு பிரதான வீதிகள் சந்திக்கும் இடமாக உள்ளதாலும் சாரதிகளும் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், எந்த நேரத்திலும் குறித்த மரம் விழும் முறிந்து விழும் அபாயம் உள்ளது.

எனவே, மரத்தினை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

வி .தீபன்ராஜ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular