Homeஉள்நாடுகொழும்பை ஆளப்போவது யார்? ஓங்குகிறது என்பிபியின் கை!

கொழும்பை ஆளப்போவது யார்? ஓங்குகிறது என்பிபியின் கை!

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட, தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க, சுயாதீன குழுக்களின் ஒன்பது பிரதிநிதிகள் முடிவு செய்துள்ளனர்.

மேற்படி மாநகர சபைக்கு சுயேட்சைக் குழுக்களின் கீழ் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்தே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையில் உள்ள 117 இடங்களில் தேசிய மக்கள் சக்தி 48 இடங்களை வென்றது. ஐக்கிய மக்கள் சக்தி 29 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 13 இடங்களையும் வென்றது.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 05 இடங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் 04 இடங்களையும், சுயேட்சைக் குழு எண் 03 இடங்களையும், சர்வ ஜன பலய கட்சி 02 இடங்களையும் வென்றன. அத்துடன், சுயேட்சைக் குழுக்கள் எண் 04 மற்றும் எண் 05 ஆகியவை, தலா 2 இடங்களை வென்றன.

இதேபோல், தேசிய சுதந்திர முன்னணி, பொதுஜன பெரமுன, ஜனநாயக தேசிய முன்னணி, தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய குடியரசு முன்னணி, அத்துடன் சுயேச்சைக் குழு ஆகியவை தலா 01 மற்றும் 02 இடங்களை வென்றன.

இத்தகைய பின்னணியில்தான், சுயாதீன குழுக்களின் பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர்.

இதற்கிடையில், அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை அமைப்பதற்காக, மற்ற எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் நேற்று உடன்பாட்டை எட்டின.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இத்தீர்மானம் எட்டப்பட்டது.

அதன் பிறகு, இரு கட்சிகளும் இரு கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் கையெழுத்திட்ட கூட்டு அறிக்கையை வெளியிட்டன. அதில், அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களில் மற்ற எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular