HomeBig Storyகடலில் மூழ்கி பலியான பொகவந்தலாவ இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!

கடலில் மூழ்கி பலியான பொகவந்தலாவ இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!

வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு இளைஞர்களும் நீராடிக் கொண்டிருந்தபோது கடலலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார், கடற்படையினரின் உதவியோடு நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலங்களாக மீட்கப்பட்ட மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
17 வயதுடைய உதயகுமார் ஸ்ரீதரன், 19 வயதான ஸ்ரீகாந்த் சரண் ராஜ் , 18 வயதான ஸ்ரீகாந்த் அஜித் குமார், மற்றும் 27 வயதான யூசுப் (வயது 27) ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் ஸ்ரீகாந்த் சரண் ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித் குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நான்கு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வென்னப்புவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.சதீஸ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular