இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும் நாளை(14) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளைய தினம் எதிர்ப்பு பேரணியொன்றும் நடத்தப்படும் எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஊழியர்களையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையில் தாம் முன்வைத்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதே நாளைய தொழிற்சங்க நடவடிக்கையின் நோக்கம் என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.