follow the truth

follow the truth

October, 14, 2024
HomeTOP1மூன்று வேட்பாளர்கள் தங்களின் ஜனாதிபதி தேர்தல் செலவுகள் குறித்து தெரிவிக்கவில்லை

மூன்று வேட்பாளர்கள் தங்களின் ஜனாதிபதி தேர்தல் செலவுகள் குறித்து தெரிவிக்கவில்லை

Published on

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்கள் நேற்று (13) இறுதிக்குள் தமது தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்படி, 3 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வேட்பாளர்களுக்கு செலவின அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (13) நள்ளிரவுடன் முடிவடைந்தது.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 38 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதேவேளை, இன்று (14) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, 28 அரசியல் கட்சிகள் தமது செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தலைவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள் அதற்கான செலவின அறிக்கைகளை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு முன்னர் குறிப்பிட்டிருந்தது.

அதன்படி, உரிய காலத்திற்குள் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

யானை சின்னத்தின் வெற்றிக்கு எவ்வாறு வியூகங்களை வகுத்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடல்

2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு தேர்தல்...

பாடசாலை மாணவியிடமிருந்து பிரதமருக்கு கிடைத்த மகஜர்

காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணம் செய்த 14 வயதுடைய பாத்திமா நடா என்ற மாணவி இன்று (14) முற்பகல்...

பாடசாலைகளின் விடுமுறை குறித்து விசேட அறிவிப்பு

கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம்...