follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉலகம்பிரித்தானியாவில் ஒமிக்ரான் - எச்சரிக்கும் பிரத்தானியா சுகாதார செயலாளர் சஜித் ஜாவித்

பிரித்தானியாவில் ஒமிக்ரான் – எச்சரிக்கும் பிரத்தானியா சுகாதார செயலாளர் சஜித் ஜாவித்

Published on

பிரித்தானியாவில் ஒமிக்ரான் மாறுபாடு ‘அதிக விகிதத்தில் பரவுகிறது’ என்று சுகாதார செயலாளர் எச்சரித்துள்ளார்.

நேர்காணில் ஒன்றில் பிரத்தானியா சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் கூறியதாவது, ஒமிக்ரான் மாறுபாடு இதுவரை கண்டிராத அளவில் பரவுகிறது.

தொடர்ந்து ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்டுகளுக்கு ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது.

பிரித்தானியா மற்றொரு அலையை எதிர்கொள்கிறது, மீண்டும் தடுப்பூசி மற்றும் வைரஸுக்கு இடையிலான பந்தயத்தில் நாம் இருக்கிறோம்.

மக்கள் முடிந்த வரை விரைவாக பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி போதுமானதாக இல்லை, ஆனால் 3 டோஸ் தடுப்பூசி அறிகுறி தொற்றுக்கு எதிராக சிறப்பான பாதுகாப்பு அளிக்கிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு பூஸ்டர் தடுப்பூசி திட்டங்களை விரிவுப்படுத்த இருக்கிறோம்.

நாட்டில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் மற்றும் வாரத்திற்கு 7 நாட்களும் சுமார் 12 மணிநேரம் திறந்திருக்கும்.

சில மையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும். ஆனால், கிறிஸ்மஸ் அன்று தடுப்பூசி மையங்களை திறக்க வாய்ப்பில்லை.

தற்போது, பிரித்தானியாவில் ஒமிக்ரான் தொற்று பாதித்தவர்கள் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒமிக்ரான் முந்தைய மாறுபாடுகளை விட தீவிரம் குறைந்ததா என தற்போது வரை உறுதியாக தெரியவில்லை.ஆனால், அது அதிக விகிதத்தில் பரவுவதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சஜித் ஜாவித் எச்சரித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன் – 17 ஆண்டுகள் சிறை தண்டனை?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது...